News

A Historic Cultural Milestone for India | GT ISL

 அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்ததை அடுத்து, 161 அடி உயர கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இணைந்து காவி கொடியை ஏற்றினர். இதை பிரதமர் “வெறும் கொடி அல்ல; இந்தியாவின் கலாசார அடையாளம்” எனக் கூறி, 500 ஆண்டு கால கனவு நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார். இந்த நிகழ்வு நாட்டின் கலாசார விழிப்பையும், ஒற்றுமை, தர்மம், தெய்வீகம் போன்ற ராமரின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் போதித்த கடமை, கருணை, நீதி ஆகியவற்றை பின்பற்றி 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். ___________________________________________________ Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Rs 20 Lakh Sent via Hawala Network | GT ISL

 

ஜம்மு–காஷ்மீரின் ஸ்ரீநகர் நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட 360 கிலோ வெடி பொருட்கள் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் திடீரென வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர்; 32 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தற்செயலானது; பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வெடி பொருட்கள் டில்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள்களுடன் தொடர்புடையதாகும். விசாரணையில் பல டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; சம்பவத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணை நடக்கிறது.

____________________________________________________________

Please welcome Subscribe & Bell button and Sharing on link to your spreading


YouTube: @GladtTidingsDeaf    |     Facebook: @GladTidingsDeaf    |    Instagram: @gladtidingsdeaf

Comments